தற்போது www.flippar.in என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது..!!!


ஸ்டாப் செலக்சன் கமிஷன் நடத்தும் பட்டதாரி நிலை தேர்வு


மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களிலும், பிற அரசுத் துறைகளிலும் மூன்றாம் நிலைப் பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக எஸ்.எஸ். சி., எனப்படும் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் மூலமாக தேர்வுகள் நடத்தப்படுவது நாம் அறிந்ததுதான்.

இந்தக் குழுமத்தின் மூலம் 2 பிரிவுகளில் உதவியாளர், பல்வேறு பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவற்றில் குரூப் ஏ பிரிவில் உதவியாளர், இன்ஸ்பெக்டர் ஆப் போஸ்ட்ஸ், இன்ஸ்பெக்டர் ஆப் சென்ட்ரல் எக்சைஸ், பிரிவென்டிவ் ஆபிசர், எக்ஸாமினர், துணை ஆய்வாளர்கள், இன்ஸ்பெக்டர் ஆப் இன்கம்டாக்ஸ், அசிஸ்டன்ட் என்போர்ஸ்மென்ட் ஆபிசர், டிவிஷனல் அக்கவுன்டன்ட், ஸ்டாடிஸ்டிகல் இன்வெஸ்டிகேட்டர்-கிரேடு 2 ஆகிய பதவிகளும், குரூப் பி பிரிவில் ஆடிட்டர், ஜூனியர் அக்கவுன்டன்ட், யூ.டி.சி., டாக்ஸ் அசிஸ்டன்ட், கம்பைலர் ஆகிய பதவிகளும் அடங்கும்.

வயது: எஸ்.எஸ்.சி.,யின் பட்டதாரி நிலைத் தேர்வு நடத்தப்படும் பதவிகள் அனைத்திற்கும் 15.04.2011 தேதி அடிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிரேடு 2 ஸ்டாடிஸ்டிகல் இன்வெஸ்டிகேடர் பதவிக்கு விண்ணப்பிக்க உச்ச பட்ச வயது 26 ஆகவும், சி.பி.ஐ.,யில் துணை ஆய்வாளர் மற்றும் அஸிஸ்டன்ட் பதவிக்கு குறைந்த பட்ச வயது 20 ஆகவும் அதிகபட்ச வயது 27 ஆகவும், இதர பதவிகளுக்கு குறைந்த பட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 27 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: ஸ்டாப் செலக்ஷன் அறிவித்துள்ள கம்பைலர் பதவிக்கு விண்ணப்பிக்க எகனாமிக்ஸ், கணிதம் அல்லது புள்ளியியலைக் கட்டாயப் பாடமாகக் கொண்டு பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். பிரிவு 2 ஸ்டாடிஸ்டிகல் இன்வெஸ்டிகேடர் பதவிக்கு விண்ணப்பிக்க பட்டப்படிப்பில் புள்ளியியலை முக்கிய பாடமாகவோ அல்லது முக்கியப் பாடமாகப் படித்திருக்க வேண்டும். எகனாமிக்ஸ் பாடத்தைப் படித்தவர்களும், காமர்ஸ் பிரிவில் புள்ளியியலைப் படித்தவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். முழு விபரங்கள் அறிய கட்டாயம் இணைய தளத்தைப் பார்க்கவும்.
தேர்ச்சி முறை: எஸ்.எஸ்.சி.,யின் மேலே கண்ட பதவிகளுக்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல், திறனறியும் தேர்வு, கம்ப்யூட்டர் திறனறியும் தேர்வு போன்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு மையங்கள்: ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் இந்தப் பதவிகளுக்காக நடத்தவுள்ள தேர்வு தமிழ் நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய மையங்களிலும், புதுச்சேரியிலும், திருவனந்தபுரத்திலும் நடைபெறும். ஒவ்வொரு தேர்வு மையத்திற்கு என்று குறிப்பிட்ட கோடு எண் உள்ளது என்பதால் விண்ணப்பிக்கும் போது கவனம் தேவை. இந்தத் தேர்வு மையங்களில் தேர்வு எழுத விரும்புபவர்கள் தங்கள் விண்ணப்பங்களை 15.04.2011க்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பிப்பது குறித்த முழு விபரங்களுக்கு இணைய தளத்தைப் பார்க்கவும்.

முகவரி:

Regional Director ( SR),
Staff Selection Commission,
EVK Sampath Building, 2nd Floor,
College Road,
CHENNAI 600006.
விண்ணப்பிக்க இறுதி நாள் : 15.04.2011

Labels: ,

2 Comments:

At April 12, 2011 at 5:05 PM , Blogger இராஜராஜேஸ்வரி said...

Useful post.Thank you for sharing.

 
At April 12, 2011 at 5:22 PM , Blogger kingofnature said...

வருக்கைக்கு நன்றி! ராஜேஸ்வரி மீண்டும் வருக

 

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

வருகைக்கு நன்றி!!.. தங்களின் மேலதிக விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

Subscribe to Post Comments [Atom]

HOME  |  NEWS  |  COMPUTER  |  HEALTH  |  CUISINE  |  PHILOSOPHY  |  STORY  |  AGRI


!! மனிதன் - எதை நோக்கி !!

↑ Grab this Headline Animator